dimanche 8 avril 2012

காத்துகிடக்கின்றன

ஒரு சொட்டு கண்ணீர் வந்தாலும்
பட்டென்று துடைக்க
காத்துகிடக்கின்றன
என் இரு கைகள் !!!

கவலையால் நீ வாட
உன் தலை சாய
காத்துகிடக்கின்றன
என் இரு தோள்கள்

உன் சின்ன சின்ன அசைவுகளும்
செவி கொடுத்து கேட்க
காத்துகிடக்கின்றன
என் இரு செவிகள்

வறண்ட உன் உதட்டிற்கு
தாகம் தீர்க்க
காத்துகிடக்கின்றன
என் உதடுகள்

காரிருள் மழையில்
குளிரில் வாடும்
உன் தேகத்திற்கு
சூட்டை கொடுக்க
காத்துகிடக்கின்றன
என் தேகம்

என் பெண்மையும்
உன் ஆண்மையும் கலந்து
வியர்க்கும் நேரம்
எப்போதோ !!!!!

பகலில் உன் நினைவோடும்
இரவில் உன் கனவுகலோடும்
தவிக்கும் என் மூளைக்கு
ஓய்வு எப்போதோ !!!

அதற்கு தீர்வு
உன்னை
காண்பது மட்டுமே..........


ஓவியா

Aucun commentaire:

Enregistrer un commentaire