மேகத்தில் மறைந்திருக்கும் வெண்நிலவே நீ சொல்லு
எங்கே என் அவர் ....
தினமும் என் மேனியை தழுவி விட்டு போகும்
தென்றல் காற்றே நீ சொல்லு
எங்கே என் அவர் ....
என் வீட்டு தோட்டத்தில் பூத்து குலுங்கும்
மல்லிகையே நீ சொல்லு
எங்கே என் அவர் ....
மென்மையாக என் பாதங்களை முத்தமிட்டு போகும்
கடல் அலையே நீ சொல்லு
எங்கே என் அவர் ....
தேடுகிறேன்.... தேடுகிறேன்...கிடைக்கவில்லை !!!!!
சோகத்தில் மூழ்கி இருக்கும் என் இமைகளை திறக்க
என் அவர் எனக்கு வேனும்!!!
வறண்டு போன என் இதழ்களை முத்தம் இட
என் அவர் எனக்கு வேனும் !!!
பின்னிய கூந்தலை கலைத்து விட
என் அவர் எனக்கு வேணும் !!!
மடி மீது தலை வைத்து படுக்க
என் அவர் எனக்கு வேணும் !!!
தேடுகிறேன்... தேடுகிறேன்... கிடைக்கவில்லை !!!
என் உயிரே நீ எங்கே இருக்கிறாய்
உனக்காக காத்திருப்பேன்
கண்களில் உன் உருவமும்
உயிரில் உன் நினைவையும்
சுமந்து கொண்டு கால முழுவதும்
ஓவியா
Aucun commentaire:
Enregistrer un commentaire