mardi 1 mai 2012

என் நண்பன்......

உன் முதல் சந்திப்பு
எனக்கு கிடைத்த
முதல் பரிசு உன் நட்பு!
என் கவிதை படித்து
என் மீது உனக்கு வியப்பு
ஏன் இந்த சோகம் என்று ....

மனம் உடைஞ்ச தருனத்தில்....
ஆயிரம் கடல் தாண்டி
பயணித்து வரும்
உன் அன்பு பேச்சு
என் மனதுக்கு மருந்து

காற்றடித்தாலும் புயல்லடித்தாலும்
நீ காத்திருப்பாய் உன் கணினி முன்
என் வருகைக்காக...

பசி இன்றி தூக்கம் இன்றி
பல மணிநேரம் கதைப்போம்

கள்ளம் கபடம் இல்லாத நம் நட்பு
செடி போல் துளிர் விட்டு
செழிப்பாகி இன்று நல்ல மரமாகிவிட்டது
அதில் உன் நிழலாக நானும்
என் நிழலாக நீயும் வரவேண்டும்


Aucun commentaire:

Enregistrer un commentaire