jeudi 3 mai 2012

கண்களால் கைது செய்



வளர்பிறை நெற்றி
அதில்
அழகாய் ஒரு பொட்டு !
அம்சமாய் நீ !

ஏனோ விழிகளை மட்டும்
கடவுள் ஏன் ஈட்டியாய்
படைத்தான் உனக்கு !
நெஞ்சை துளைத்து
மறுபுறம் வருகிறதே !
என்ன கூர்மை !

உன் விழிகளை பார்த்து
நான் கண்ட உண்மை
கண்களும் பேசும் என்பதுதான் !

இமை அழகா !
விழி அழகா !
இல்லை இல்லை இரண்டும் அழகா !
பட்டிமன்றமே வைக்கலாம் !
தோற்பது யாராயினும்
ஜெயிப்பது உன் விழி அல்லவா !

இறைவா….
கண்ணீர் இல்லா
வாழ்வை

இந்த அழகு கண்களுக்கு தா !



Aucun commentaire:

Enregistrer un commentaire