வளர்பிறை நெற்றி
அதில்அழகாய் ஒரு பொட்டு ! அம்சமாய் நீ ! ஏனோ விழிகளை மட்டும் கடவுள் ஏன் ஈட்டியாய் படைத்தான் உனக்கு ! நெஞ்சை துளைத்து மறுபுறம் வருகிறதே ! என்ன கூர்மை ! உன் விழிகளை பார்த்து நான் கண்ட உண்மை கண்களும் பேசும் என்பதுதான் ! இமை அழகா ! விழி அழகா ! இல்லை இல்லை இரண்டும் அழகா ! பட்டிமன்றமே வைக்கலாம் ! தோற்பது யாராயினும் ஜெயிப்பது உன் விழி அல்லவா ! இறைவா…. கண்ணீர் இல்லா வாழ்வை
இந்த அழகு கண்களுக்கு தா !
| ||
Aucun commentaire:
Enregistrer un commentaire