mardi 1 mai 2012

ஒரு தாயின் கண்ணீர்

முதல் முறை அவரை பார்த்தேன்
என் முகம் வெக்கத்தால் சிவந்தது...
என் மனசு சொல்லியது இவர் தான்
உன் "அவர்" என்று...
புன்னகையாய் அருகில் வந்தார் !!!
மென்மையாக என் கையை பற்றி...
நான் உன்னை நேசிக்கிறேன் !!
இனி என் உயிர் உள்ள வரை
உன்னோடு தான் என்றார்!!!


கால்கள் தள்ளாடியது !!
இதயம் படபடத்தது !!
அவர் பார்வையில் மயங்கி
பேசும் சக்தி இழந்தேன் !!
அங்கே மௌனம் நிலவியது !!!

"அம்மா பசிக்குது சாப்பாடு பொடு"
என் பிள்ளைகளின் குரல் கேட்டு
நினைவுகளில் இருந்து விடுபட்டேன் ...

நஞ்சை விட கொடியது
ஏமாற்றும் ஆண்களின் மனது
அதை புரிந்துகொள்ளாமல்....
இதோ தனிமையில்
கவலைகளை மறைத்து
கண்களில் கண்ணீரோடு வாழ்கிறேன்
என் உயிர் உள்ள வரை
என் பிள்ளைகளுக்காக!!!


Aucun commentaire:

Enregistrer un commentaire