mardi 1 mai 2012

ஓவியா வின் கற்பனை காவியம் !!!!

ஏன் இதயம் வறண்ட பாலைவனம் போல இருந்தது
இன்று
காதல் பூக்கள் பூத்து குலுங்கும் சோலைவனம்
அதில்
வண்ணத்து பூசிகளும் சிட்டு குருவிகளும்
ஆடி பாடும் அழகிய பிருந்தாவனம்

இவை எல்லாம்

உன் விழி திண்டலில்
என் முகம் வெக்கத்தால்
உன் மார்பில் முகம் புதைத்து
நான் தள்ளாடிய போது...

என் தலை சாய்த்து
உன் முரட்டு விரல்கள்
என் கூந்தலில் சிக்கி
மெல்ல என் இதழில்
நீ முத்தம் இட்ட போது...

கம்பிரமான
உனது குரல்
என் செவிகளில்
இன்னிசை பாடிய போது...

கவலைகளையும்
துக்கங்களையும்
மறந்து
இன்று வாழ்கையை
ரசித்து கொண்டிருக்கிறேன்

அன்பே என் கடைசி மூச்சு
இருக்கும் வரை
நீ என்னுடன் இருப்பாயா ??



Aucun commentaire:

Enregistrer un commentaire