jeudi 3 mai 2012

ஏன் பிரிந்தாய் ???


அன்பு என்னும் நம் பிரிவை
உயிர் மட்டும்தான் பிரிக்கும்
என்றுதானே நானிருந்தேன்.
எப்படி பிரிந்தாய் ?

நீ
இல்லாமல்
வாழத்தெரியாத நான்

நீ
இருந்தும் இல்லாமல்
எப்படி வாழ்வேன்



கண்களால் கைது செய்



வளர்பிறை நெற்றி
அதில்
அழகாய் ஒரு பொட்டு !
அம்சமாய் நீ !

ஏனோ விழிகளை மட்டும்
கடவுள் ஏன் ஈட்டியாய்
படைத்தான் உனக்கு !
நெஞ்சை துளைத்து
மறுபுறம் வருகிறதே !
என்ன கூர்மை !

உன் விழிகளை பார்த்து
நான் கண்ட உண்மை
கண்களும் பேசும் என்பதுதான் !

இமை அழகா !
விழி அழகா !
இல்லை இல்லை இரண்டும் அழகா !
பட்டிமன்றமே வைக்கலாம் !
தோற்பது யாராயினும்
ஜெயிப்பது உன் விழி அல்லவா !

இறைவா….
கண்ணீர் இல்லா
வாழ்வை

இந்த அழகு கண்களுக்கு தா !



உன் மனைவி

என்று உன்னை பார்த்தேனோ
அன்றே நான் என்னை மறந்தேன்
உன்னோடு பேச்சும் ஒவ்வொரு
நிமிடம் என் மனதுக்குள்
ஆயிரம் பட்டாம்பூச்சி
பறப்பது போல ஒரு உணர்வு.
எத்தனே சொந்தம் என் வாழ்வில் வந்தாலும்
உன் அன்பு என்னும் பந்தம்
எதுவும் தந்ததில்லை
உனக்காக நான் வடிக்கும்
கண்ணீர் முத்துக்கள்
என் இதயதில் பத்திரமாக
பூட்டி வைத்து இருக்கேன்
உன்னே சந்திக்கும் நாள்
உனக்கு மாலை சூட
இனி ஒரு ஜென்மம் இருந்து
உயிரினமாய் பிறந்தால்
உன் மனைவி ஆகும் பாக்கியம் வேண்டும்



வா கடவுளே வா !!!!

நீ என் மனதில் இருந்தால்
என் துன்பம் தீரும்...

நீ என் கூட இருந்தால்
என் வேதனை தீரும்

நீ என் உயிரில் இருந்தால்
என் உள்ளம் இன்பம் அடையும்

என்னை சுற்றி ஆயிரம் உறவுகள் இருந்தும்
நான் தனிமையில் தான் வாழ்கிறேன்

நீ என்னை கூப்பிடும் அந்த நாள் வரை
நான் காத்திருக்க மாட்டேன்

நீ சீக்கிரம் வந்து என்னை
உன்னுடன் வைத்துகொள்

வா கடவுளே வா !!

இந்த பொய்யான மனிதர்களிடம் இருந்து
என்னை காப்பாற்று !!


என் உயிர் நீதானே


mardi 1 mai 2012

உன் நினைவுகள் !!!






ஒரு தாயின் கண்ணீர்

முதல் முறை அவரை பார்த்தேன்
என் முகம் வெக்கத்தால் சிவந்தது...
என் மனசு சொல்லியது இவர் தான்
உன் "அவர்" என்று...
புன்னகையாய் அருகில் வந்தார் !!!
மென்மையாக என் கையை பற்றி...
நான் உன்னை நேசிக்கிறேன் !!
இனி என் உயிர் உள்ள வரை
உன்னோடு தான் என்றார்!!!


கால்கள் தள்ளாடியது !!
இதயம் படபடத்தது !!
அவர் பார்வையில் மயங்கி
பேசும் சக்தி இழந்தேன் !!
அங்கே மௌனம் நிலவியது !!!

"அம்மா பசிக்குது சாப்பாடு பொடு"
என் பிள்ளைகளின் குரல் கேட்டு
நினைவுகளில் இருந்து விடுபட்டேன் ...

நஞ்சை விட கொடியது
ஏமாற்றும் ஆண்களின் மனது
அதை புரிந்துகொள்ளாமல்....
இதோ தனிமையில்
கவலைகளை மறைத்து
கண்களில் கண்ணீரோடு வாழ்கிறேன்
என் உயிர் உள்ள வரை
என் பிள்ளைகளுக்காக!!!